Header Ads

வருகிற ஜூன் மாதம் முதல் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலாக மாற்றம்

Image result for rockfort expressதிருச்சி-சென்னை இடையே தினமும் இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு அதிவிரைவு (சூப்பர் பாஸ்ட்) ரெயிலாக வருகிற ஜூன் மாதம் முதல் இயக்கப்பட உள்ளது. மேலும் வண்டியின் எண்ணும், புறப்படும் மற்றும் சேரும் நேரமும் மாற்றப்படு கிறது.

வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி முதல் சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு மலைக்கோட்டை அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 12653) புறப்படும். திருச்சிக்கு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு வந்தடையும். இதேபோல வருகிற ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் திருச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு மலைக்கோட்டை ரெயில் (வண்டி எண் 12654) புறப்பட்டு சென்னை எழும்பூரை மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு சென்றடையும்.

பயண நேரம் குறையும்

மலைக்கோட்டை ரெயில் திருச்சியில் இருந்து தற்போது இரவு 10.40 மணி அளவில் புறப்படுகிறது. வருகிற ஜூன் மாதம் முதல் 5 நிமிடம் குறைக்கப்பட்டு இரவு 10.35 மணிக்கு புறப்படுகிறது. மேலும் தற்போதைய நேரத்தை விட சென்னைக்கு 20 நிமிடம் முன்னதாக சென்றடையும்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் போது 30 நிமிடம் பயண நேரம் குறைய உள்ளது. ரெயிலின் வேகம் அதிகரிப்பதால், பயண நேரம் குறையும் போது பயணிகளுக்கு மகிழ்ச்சி என்றாலும், வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே வந்தடைந்தால் தூக்கம் பாதிக்கும் என சில பயணிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.