திருச்சிஏர்-ஏசியா நிறுவனம் திருச்சி-மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை
திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா நிறுவனம் நேற்று முதல் கூடுதல் சேவையை துவக்கி உள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜா ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஏர்ஏசியா, மலிண்டோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் ஏர்-ஏசியா விமானம் மலேசியாவுக்கு அதிகளவு விமான சேவையை இயக்கி வருகிறது. அதாவது தினமும் 3 முறை வீதம் வாரத்துக்கு 21 முறை விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், விமான நிறுவனங்கள் கோடைகால சிறப்பு சேவைகளையும் இயக்குகின்றன. ஏர்-ஏசியா விமானம்
மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை இயக்க முடிவு செய்தது. இதன்படி, திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று முதல் கூடுதல் விமானம் இயக்கத் தொடங்கி உள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்று இரவு 9.45 மணிக்கு வந்த ஏர்-ஏசியா விமானம் இரவு 10.30 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது. இதன் மூலம் ஏர்-ஏசியா விமான நிறுவனம் தினமும் 4 முறை மலேசியாவுக்கு விமானத்தை இயக்குகிறது. இதனால் திருச்சி-மலேசியாவுக்கு வாரத்துக்கு 28 முறை விமான சேவை வழங்கும் நிறுவனம் என்ற பெருமை பெற்றுள்ளது. ஆனால் ஏர்-ஏசியா நிறுவனம் சென்னையிலிருந்து மலேசியாவுக்கு வாரத்துக்கு 14 முறை தான் விமான சேவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை இயக்க முடிவு செய்தது. இதன்படி, திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று முதல் கூடுதல் விமானம் இயக்கத் தொடங்கி உள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்று இரவு 9.45 மணிக்கு வந்த ஏர்-ஏசியா விமானம் இரவு 10.30 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது. இதன் மூலம் ஏர்-ஏசியா விமான நிறுவனம் தினமும் 4 முறை மலேசியாவுக்கு விமானத்தை இயக்குகிறது. இதனால் திருச்சி-மலேசியாவுக்கு வாரத்துக்கு 28 முறை விமான சேவை வழங்கும் நிறுவனம் என்ற பெருமை பெற்றுள்ளது. ஆனால் ஏர்-ஏசியா நிறுவனம் சென்னையிலிருந்து மலேசியாவுக்கு வாரத்துக்கு 14 முறை தான் விமான சேவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment