புதிய முனையம் அமைக்க ரூ.850 கோடி நிதி ஒதுக்கீடு திருச்சி விமான நிலைய இயக்குனர் தகவல்

வாரத்திற்கு 4 நாட்கள் இவ்விமானம் இயக்கப்படும். திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு மொத்தம் 345 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 228 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த 2 வாரங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். ஒரு வருடத்திற்குள் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும்.
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்க ரூ.850 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்படும். 2018 ஜூன் மாதம் முதல் இதற்கான களப்பணிகள் துவங்கும். இந்த வருடம் மாதத்திற்கு 600 டன் சரக்கு சேவை உள்ளது. சரக்கு சேவை 8000 டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான சேவை அதிகரித்துள்ளதால் இலக்கு எட்டப்படும். என தெரிவித்தார்
Post a Comment