Header Ads

சென்னை நெருக்கடியை சமாளிக்க திருச்சியை தலைநகரமாக்க வேண்டும்

Image result for trichy
சென்னையில் மழை காரணமாக தொடரும் நெருக்கடியை சமாளிக்க தமிழகத்தின் தலைநகராக திருச்சியை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். இதுகுறித்து திருச்சியில் அவர் அளித்த பேட்டி: நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு வழங்கக்கூடிய இலவச மின்சாரம் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். 

காவிரியில் மாதாந்திர நீர் பங்கீடு என்பதை மாற்றி தினம்தோறும் நீர் பங்கீடு என்பதை கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். கள் தடையை நீக்கினால் எடப்பாடி அரசுக்கு ஆதரவு பெருகும். வறட்சியால் பட்டுப்போன தென்ன மரங்களை அகற்றி மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய நிவாரணம் வழங்க வேண்டும்.

கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டலில் நாட்டு மாடுகளின் விந்துகளை செலுத்த வேண்டும். சென்னையில் தொடரும் மழையால் ஒரே நாளில் வெள்ளக்காடாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி அரசு இயந்திரங்கள் முடங்கி நெருக்கடி ஏற்படுகிறது. எனவே தமிழகத்தின் மைய பகுதியான திருச்சியை தலைநகரமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.