Header Ads

திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

Image result for jamal mohamed college job fairதிருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜமால்முகமது கல்லூரியில் வருகிற 15ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் ராஜாமணிவிடுத்துள்ள செய்திகுறிப்பு: திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஊரக வளாச்சித்துறை இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15ம் தேதி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடை பெறுகிறது . 

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பொறியியல் துறை, 108 ஆம்புலன்ஸ், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், முன்னணி தனியார் ஓட்டல் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் சாலைகள் என 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை வாய்ப்பு முகாமில் திருச்சி மாவட்டத்தை  சேர்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, கலை, அறிவியல் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன் பெறலாம். 

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு (பயோ டேட்டா) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் வேலை வாய்ப்பு முகாமிற்கு நேரடியாக வரவேண்டும். இவ்வாய்ப்பினை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்தி தனியார்துறையில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.