பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் அகற்றம்
திருச்சியில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் அகற்றினர்.மாநகரில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக பஸ்களில் உள்ள ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு துணை கமிஷனர் மயில்வாகனன் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று ெபான்மலை ஜி.கார்னர் பகுதியில் வடக்கு போக்குவரத்து உதவி கமிஷனர் முருகேசன், கன்டோன்மென்ட் போக்குவரத்து உதவி கமிஷனர் அருணாசலம் தலைமையிலான போலீசார் அவ்வழியே வந்த பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதே வாகனத்தின் டயர் அடியில் வைத்து நசுக்கப்பட்டது. இதுபோன்ற சோதனை தொடரும் என போலீசார் எச்சரித்தனர்.
Source:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=766425
Post a Comment