விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றவர்கள் விளையாட்டு உபகரணங்கள் பெறுவதற்கு வருகிற 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: 2016-2017ம் ஆண்டிற்கு, 2016 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற திருச்சி மாவட்டத்தை சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விளையாட்டு உபகரணங்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது அசல் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்களுடன் 28.7.2017 அன்று காலை 10 மணிக்குள் அண்ணா விளையாட்டரங்க மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி தொலைபேசி எண் 0431 - 2420685 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது அசல் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்களுடன் 28.7.2017 அன்று காலை 10 மணிக்குள் அண்ணா விளையாட்டரங்க மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி தொலைபேசி எண் 0431 - 2420685 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்
Post a Comment